Tuesday, September 16, 2008

சொல்க அய்யா

 பாசமதைப் புரியார் மேல் பாசம் வைத்து
  படுகின்ற பாடதனைச் சொல்லுதற்கு
  ஆசையதை அதிகரிக்கும் தமிழாம் அன்னை
  அவர் கூட உதவவில்லை உணர்கின்றேன் நான்
  நேசமதை உணராதார் நெஞ்சம் தன்னில்
  நினைவெதுவும் இல்லாமல் அன்பைக் கொன்று
  வாசமில்லா வாழ்க்கையினை வாழுகின்றார்
  வாழ்வதாகப் பெருமை வேறு கொள்ளுகின்றார்


  கூசாமல் பிறர் மனத்தைக் கொல்லுகின்றார்
  கொல்வதையேக் கலையாக்கிச் சொல்லுகின்றார்
  பேசாமல் கொடுமை வழி பேணுகின்றார்
  பெரியவர் போல் நடிக்கின்றார் நாணமின்றி
  ஈசா எம்பரம் பொருளே இவரை இங்கு
  எதற்காக படைத்திட்டாய் சொல்க தேவே
  காசாலும் பொருளாலும் பிறரை இங்கு
  கடிந்தொழிக்க வேண்டுமென்றோ சொல்க அய்யா

0 மறுமொழிகள்: