Sunday, September 21, 2008

மாக்கலைஞன் சிவாஜி

 ராஜாமணியென்னும் அன்னை பெற்ற ராஜாமணி அவனே வாய் வழியாய்ப்
  பேசா மொழியெல்லாம் விழிகள் தன்னால் பேசிப் புரிய வைக்கும் பேரருளே
  ரோஜா மலர் போல மென்மையான நோயில்லா மனம் கொண்ட நற் கலைஞன்
  கூசாமல் அவன் தன்னை நகலெடுக்கக் கோடிப் பேர் முயன்றிங்கு தோற்றே போனார்
  கூஜாவைத் தூக்கியேனும் அவனின் மேன்மை கொண்டு விட வேண்டும் என்று பலர் முயன்றார்
  ராஜாவாய் அவன் மட்டும் இன்று வரை நற்றமிழர் உள்ளத்தில் வாழ்கின்றானே
  ஆ ஜா என்று இந்தியிலே நடிப்பாரெல்லாம் அவன் நடித்த வேடம் போட அச்சம் கொண்டார்
  தேசு புகழ் சிவாஜியெனும் மாக்கலைஞன் தெய்வம் தந்த மாக்கொடையே உணர்ந்தோம் வென்றோம்

1 மறுமொழிகள்:

said...

http://pathivubothai.blogspot.com/2008/09/blog-post_20.html

எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று.