Sunday, September 7, 2008

ஆத்தி சூடி அவ்வை பழம்பாடல்

 அவ்வையென்னும் அறிவார் தமிழ் மகள்
  ஆத்திசூடியை அருளிச் செய்தார்
  செவ்விததனை நாங்க ளெல்லாரும்
  சிறிய வயதில் கற்றே உணர்ந்தோம்
  கொவ்வைச் செவ்வாய்க் குழந்தைகட் கெல்லாம்
  கூற வேண்டும் தமிழர் நன்கு
  அவ்வை சொல்லில் அறிவை உணர்வை
  அறிந்தே அவர்கள் உயர்தல் வேண்டும்


  விரும்பிச் செய்க அறத்தை என்றார்
  விரும்பா அறத்தை வேடம் என்றார்
  விரும் பினாலே செய்த தாகும்
  வேறு விதங்கள் அசிங்கமாகும்
  தரும்போ துள்ளம்தரு வதாகத்
  தான்நினைத் தாலே தருதல் வீழும்
  அரும்பும் தமிழில் அவ்வை சொன்ன
  ஆத்தி சூடி தினமும் பார்ப்போம்



  அறம் செய்ய விரும்பு

0 மறுமொழிகள்: