Friday, September 19, 2008

அவ்வை நன்னெறி

நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு
  நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு
  கொல்லுகின்ற துன்பம் ஒன்று வந்து விட்டால்
  குலைந்தழுது ஒழிவாரோ என்றும் மாட்டார்
  அல்லவர்தான் அழுது நிற்பார் அரற்றி நிற்பார்
  அறிவுடைய நல்லவர்கள் தெளிந்தே நிற்பர்
  புல்லர்களோ மண்குடம் போல் உடைந்தால் போச்சு
  பொன்குடமே நல்லவர்கள் உடைந்தும் பொன்னே


  செய்யுள்

  சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
  றல்லாதார் கெட்டாலங்கென்னாகும் - சீரிய 
  பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
  மண்ணின் குடமுடைந்தக்கால்

0 மறுமொழிகள்: