Wednesday, September 3, 2008

புரிந்து கொள்ளும

 யாரையுமே எழுதிடலாம் என்ற போக்கு
  எவரையுமே திட்டிடலாம் என்ற நோக்கு
  சாரமில்லார் செய்கின்ற வேலையன்றி
  சத்தியத்தை உணர்ந்தவர்கள் செய்வதில்லை
  யாரெவரோ அவரை நன்கு தெரிந்த பின்னர்
  எழுதுவதில் அறிவின் ஒளி தெரிய வேண்டும்
  ஊரிலுள்ள அனைவரையும் பொறுப்பேயின்றி
  ஒழிக்க எண்ணும் அவர் தமிழே அறியாரன்றோ


 விண்ணப்பம் போட்டெவரும் தந்தை தாயார்
  வீட்டினிலே பிறப்பதில்லை அவர்கள் சேர
 மண்ணகத்தில் வந்து விட்டோம் அதற்கு முன்பே
  மனிதர்களோ சாதிகளின் பிடியிலுள்ளார்
 நம்மகத்தே அவ்வுணர்வே யின்றி நாட்டில்
  நல்லவர்கள் தனையெல்லாம் நட்பு கொண்டு
 செம்மாந்து அனைவரையுமே உறவாய்க் கொண்டு
  சீராக வாழ்வதனை அறியார் இங்கு

 
 நம்மை இந்த சாதியென்று திட்டுகின்றார்
  நம்மறிவைக் குறையென்று கொட்டுகின்றார்
 எம்மறிவோ அவர்களையும் அன்பு செய்து
  இவரும் நம் தமிழினத்தார் என்றே போற்றும்
 நம்மவரே திட்டுகின்றார் உண்மை தன்னை
  நமதுணர்வை அறியாமல் கொட்டுகின்றார்
 எம்மவரே உம் கோபம் பழையார் மேலே
  எமை அதிலே சேர்க்காதிர் புரிந்து கொள்ளும்

1 மறுமொழிகள்:

said...

>>>>
விண்ணப்பம் போட்டெவரும் தந்தை தாயார்
வீட்டினிலே பிறப்பதில்லை அவர்கள் சேர
மண்ணகத்தில் வந்து விட்டோம் அதற்கு முன்பே
மனிதர்களோ சாதிகளின் பிடியிலுள்ளார்
நம்மகத்தே அவ்வுணர்வே யின்றி நாட்டில்
நல்லவர்கள் தனையெல்லாம் நட்பு கொண்டு
செம்மாந்து அனைவரையுமே உறவாய்க் கொண்டு
சீராக வாழ்வதனை அறியார் இங்கு
<<<<

சரியாக சொன்னீர்கள்.