Tuesday, August 5, 2008

பழம் பாடல் பட்டினத்தார்

 தாய் உதிரம் தன்னோடு தரையினிலே வந்து விழ
  தாய்ப் பாலால் தான் வளரத் துவங்கி பின்னர் அத்தாயர்
  வாய்ப்பாய் நற் பசும் பாலை வாய் நிறைய ஊட்டி விட
  வந்துதவும் கடல் ஈன்ற சங்கு மீண்டும் அதுவே தான்
  தீப் பாயும் காமத் தேடலினால் கண்ட நங்கை
  திருமணத்தில் இணைகையிலே முழங்கும் எல்லாம் முடிந்து
  போப் போவென்று இறுதியிலே உறவெல்லாம் அழுகையிலே
  பொங்கி அங்கே முழங்குவதும் சங்கேதான் சங்கேதான்

  பட்டினத்துப் பிள்ளை

  முதற் சங்கம் அமூதூட்டும்மொய் குழலார் ஆசை
  நடுச் சங்கம் நல் விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
  ஆம்போது அது ஊதும் அம்மட்டோ இம்மட்டோ
  நாம் பூமி வாழ்ந்த நலம்

1 மறுமொழிகள்:

said...

nan ungal rasigan. neega nalla pesariga. neraiya matter irukku ungakitta.tamil romba nesikirigal. ungaloda pattinathar, thirukuralil kamathupal matrum pala sorpozhivugalai kettu romba anandhapatten