Friday, August 15, 2008

பழம் பாடல் அவ்வை

 சோழனது வாசலுக்கு அவ்வை என்னும்
  சொல்லாட்சி நிறைந்த அநதக் கிழவி வந்தாள்
  தோளினிலே ஒன்றிரண்டு முடிச்சினோடு
  தொல் தமிழின் சிறப்போடு பெருமையோடு
  வாழிய நீ என்றவனை வாழ்த்தி நின்றாள்
  வாழ்த்துதற்கு முன் அவனோ வணங்கி நின்றான்
  சோழனது அரசவையின் புலவனான
  சொல்லரசன் கம்பனுமே உடன் இருந்தான்


  தோள் தொங்கும் முடிச்சதனைச் சோழன் பார்க்க
  தொல் தமிழாள் கூறுகின்றாள் சோழா கேள் நீ
  வாள்கொண்டு குறவர் குலப் பெண்ணொருத்தி
  வளர்ந்து நின்ற பலா மரத்தை வெட்டி வீழ்த்த
  தோள் கொண்ட கணவனோடு வாழ வந்த
  துடியிடையாள் சக்களத்தி துடித்து நின்றாள்
  பாழ் பட்ட அம்மரத்தை நானும் ஒரு
  பாட்டாலே துளிர்க்க வைத்தேன் அதற்கு அந்த

  தேன் சொல்லாள் எந்தனுக்கு மூன்றுழக்கு
  தினை தந்தாள் அதுதான் இம் முடிச்சு ஆமாம்
  வான் கொண்ட தமிழ் கொண்டு ஏழையரை
  வாழ்த்துவதே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தேன்
  ஊன் கொண்ட இவ் வாழ்வில் ஏழை தரும்
  உப்பிற்கும் புளிக்கும் நான் பாடி நிற்பேன்
  தான் என்ற அகம் கொண்ட கம்பனையே
  தலை குனிய வைத்திட்டார்அவ்வை நல்லார்

  செய்யுள்

  கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குற மகளும்
  மூழக்குழக்குத் தினை தந்தாள் - சோழா கேள்
  உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
  ஒப்பிக்கும் எந்தன் உளம்

0 மறுமொழிகள்: