Wednesday, August 20, 2008

அழிந்து போவீர்

  எத்தனையோ சொன்னாலும் கேட்கின்றாரா
  எப்பொழுதும் தவறுகளே செய்யும் மாந்தர்
  வித்தகமாய்க் கருதுகின்றார் தன்னுடைய
  விஷச் செயல்கள் அத்தனையும் வெட்கமின்றி
  பத்திரமாய் வாழுவதாய் எண்ணுகின்றார்
  பணம் சொத்து சேர்த்து விட்ட காரணத்தால்
  செத்தொழியும் வரை துன்பம் வந்து சேரும்
  செத்த பின்னர் அவர் குடும்பம் சீரழியும்

  எத்தனை பேர் அழுகையிலே வந்த செல்வம்
  எப்படி நீர் நிம்மதியினைக் கொண்டு வாழ்வீர்
  முத்தமிழின் மூத்தவராம் வள்ளுவரும்
  முறையற்றார் வீழும் வழி சொல்லிச் சென்றார்
  கற்றது போல் நடிக்கின்றீர் கவிதை சொல்வீர்
  கவலைகளுக் காளானோர் கண்ணீர் உந்தன்
  பொற்குவையைச் செல்வத்தை குடும்பம் தன்னை
  பொல பொலவென் றுதிர்த்து விடும் அழிந்து போவீர்

0 மறுமொழிகள்: