Wednesday, August 20, 2008

அழுகின்றாரே

  பணம் சேர்த்து வைத்துள்ளார் என்பதற்காய்
  பல்லிளித்துக் கைகட்டி கால்கள் பற்றி
  குணம் விட்டுக் குலம்விட்டு மானம் விட்டு
  குப்பையெனும் அப்பணத்தைப் பெற்றுக் கொண்டு
  தினம் தோறும் ஊர் சிரிக்க வாழும் மாந்தர்
  திருடரது துணையானார் எனத் தெரிந்து
  மனம் சிறந்து வாழுகின்ற தூயரவர்
  மானமற்ற அவருக்காய் அழுகின்றாரே

0 மறுமொழிகள்: