Saturday, August 30, 2008

எது அழகு அவ்வை

அழகென்றால் என்ன என்று சோழன் கேட்டான்
  அவ்வையவர் சொன்ன பதில் அழகைப் பார்ப்போம்
  பழகி விட்ட கணவனுடன் அன்பு செய்து
  பனிமொழியாள் பெறுவதுவும் கொடுப்பதுவுமாய்
  இளகி நின்று இன்பங்கள் பெற்று வாழ
  எழில் அழகு அவளுக்குக் கூடும் என்றார்
  உளம் ஒன்றிக் கொள்கின்ற காம வாழ்க்கை
  உயர்வதனால் பெண்களுக்கு அழகு என்றார்

  ஊர்வாழ உலகத்தார் உவந்து வாழ
  உண்ணாமல் அவருக்காய் நோன்பிருந்து
  சீரான உண்மைக்காய் என்றும் எங்கும்
  சிறந்தோங்கும் உண்ணாதார் உடல் அழகு
  யார் யாரென்றாலும் வந்தார்க்கெல்லாம்
  எப்போதும் உதவி நின்று வறியரானோர்
  பார்ப்பதற்கு மிக அழகு போரில் மார்பில்
  படைக்கலமாம் வேல் வாங்கி மடிந்தார்க்கெல்லாம்

  ஊர் நடுவே நட்ட நடுகல் அழகு
  உலகத்தார்க் குணர்வதற்காய் அவ்வை சொன்னார்
  பேர் பெற்று வாழுகின்றீர் தமிழினத்தீர்
  பேரழகு எதுவென்று அவ்வை சொன்ன
  சீர் உணர்ந்து வாழ்ந்திடுவீர் மேலும் மேலும்
  சீரான தமிழழகைப் போற்றி நிற்பீர்
  கார் மழையாய் அனைவருக்கும் நன்மை செய்வீர்
  கனித்தமிழின் வழிவந்த காரணத்தால்

  செய்யுள்

  சுரதந்தனில் இளைத்த தோகை சுகிர்த  
  விரதந்தனில் இளைத்த மேனி - நிரதம்
  கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
  வடுத்துளைத்த கல் லபிராமம்

0 மறுமொழிகள்: