Saturday, August 16, 2008

குறட் கருத்து

 ஏழையரைக் கருதாமல் அவர்கள் கொண்ட
  ஏக்கங்கள் உணராமல் ஆட்சி செய்வோர்
  நாளையதை எண்ணாமல் தங்கள் ஆட்சி
  நடக்க வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டோர்
  கோழைகளை கற்றறிய மாட்டார் தன்னை
  கூட்டாக வைத்திருப்பார் அவர்தம் ஆட்சி
  பீழை அது மண்ணுக்குச் சுமையே ஆகும்
  பெருஞ்சுமையாய் நிலத்திற்கு துன்பம் தரும்


  குறள்

 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்; அது அல்லது
  இல்லை நிலக்குப் பொறை

0 மறுமொழிகள்: