Friday, August 1, 2008

பணத்திற்காய் அலைகின்றாரே

 பணம் ஒன்றே வாழ்க்கையென்று ஏழையர்க்கு
  பகட்டாலே காட்டி நின்றார் திருடி வாழ்வோர்
  குணத்திற்கு மதிப்பில்லை என்றாற் போல
  கொண்ட பெருஞ் செல்வத்தால் மிரட்டுகின்றார்
  பிணமாக வாழ்கின்றார் என்பதனைப்
  பெருஞ் செல்வராகி நின்றார் உ;ணர்வதில்லை
  தினந் தோறும் அவர் ஆடும் ஆட்டம் கண்டால்
  தேம்பி நிற்பார் ஏங்கி நிற்றல் கண்டு நோவோம்

  பணம் எதுவும் செய்யும் என்ற இவரின் போக்கே
  பலர் வாழ்வைத் திசை மாற்றிப் போக வைக்கும்
  நிணம் தசை நார் நிறைந்த அவர் உடலுக்குள்ளே
  நிம்மதியே இருக்காது உண்மை சொன்னேன்
  குணம் விட்டு ஏழையரில் சிலரும் இங்கே
  கொள்ளையராய் மாறியது இவரைக் கண்டு
  மனம் இல்லாக் காவற்றுரை அவரை மட்டும்
  மடித்து விட்டுப் பெயர் கொள்ளத் துடிக்கிறது

  கோடிகளில் புரளுகின்றார் ஊர்கள் தோறும்
  கோயிலகளில் பூசைகளும் செய்து நின்றார்
  ஆடுகின்ற ஆட்டமெல்லாம் அவர் கருத்தில்
  ஆண்டவனை ஏமாற்றச் செய்யும் வேலை
  பாடுகின்றார் ஆண்டவனைப் பழிக்கு அஞ்சார்
  படைத்தவனோ இவர் கண்டு சிரித்து நிற்பான்
  கேடு கெட்ட இவரால் தான் ஏழைகளும்
  கிறுக்காகி பணத்திற்காய் அலைகின்றாரே
  

0 மறுமொழிகள்: