Saturday, August 23, 2008

வெல்வேன் நானும்

 செய்கின்ற உண்மை அன்பைத் தெரிந்து கொள்ளாச்
  சிறு மனத்தார் இன்னும்தான் இருக்கின்றாரே
  பொய்யாகப் பழகுகின்றார் என்ற போதும்
  பொறுத்தன்பு செய்து நிற்பேன் மீண்டும் மீண்டும்
  அய்யா என்றழைக்கின்றார் மனத்திற்குள்ளே
  அழுக்காறு நூறு வகை அய்யோ அய்யோ
  உய்வாரா இவரெல்லாம் உண்மை அன்பை
  உணர்வாரா ஒரு நாளும் மாட்டார் போலும்

  
  அன்பு செய்தல் ஒன்றேதான் உயிர் வாழ்க்கைக்கு
  அர்த்தம் என்று சொல்லி நின்றார் வள்ளுவரும்
  அன்பு செய்வார் ஏமாளி என்று அன்றோ
  அனேகம் பேர் கருதுகின்றார் பூவுலகில்
  தெம்பளிக்கும் அன்பதனைச் செய்தல் தன்னை
  திருவற்றார் இவருக்காய் நிறுத்த மாட்டேன்
  அன்பு செய்வேன் அன்பு செய்வேன் மீண்டும் மீண்டும்
  அன்பு செய்தே வாழ்ந்திருப்பேன் வெல்வேன் நானும்

2 மறுமொழிகள்:

said...

ஆம் அய்யா..

அன்பு செய்வோம்
அகிலம் வெல்வோம்.


என்றும் நட்புடன்,
நிலவன்
http://eerththathil.blogspot.com

said...

உங்கள் அன்பைப்புரிந்தவர்களுக்குத்தெரியும்.
தெரியாதவர்களுக்கு
சிறிது காலம் சென்று
புரியும்..!