Wednesday, August 20, 2008

மகிழ்ச்சி கொள்வான்

 ஆடுகின்றார் பாடுகின்றார் சாடுகின்றார்
  அனைத்தும் அவர் கைகளிலே இருப்பதாக
  கூடுகின்றார் அவர் தம்மைச் சுற்றி ஒரு
  கூட்டம் அவர் தமை வாழ்த்தி ஒழிப்பதற்காய்
  நாடுகின்றார் தன்னலத்தார் கூட்டமாக
  நாடொழிந்து தான் வாழ வேண்டுமென்று
  வீடு பெற மாட்டார் இவர் வீழும் போது
  வேதனைகள் தீர்ந்து ஏழை மகிழ்ச்சி கொள்வான்

0 மறுமொழிகள்: