Monday, August 18, 2008

தமிழர் நாட்டீர்

 பெண்களினை இழிப்பதுவும் பழிப்பதுவும்
  பெருமையுடன் செய்கின்றார் ஏடு தோறும்
  கண்களவர் என்பதனை உணர்ந்திருந்தும்
  கவலையின்றி எழுதுகின்றார் வெட்கமின்றி
  உண்மை நிலை உணராதார் உடல்கள் பற்றி
  ஒரு நூறு பல நூறாய் எழுதுகின்றார்
  தன் வீட்டில் உள்ள பெண்கள் இதனைக் கண்டால்
  தனை மதியார் என்றுணர மாட்டாராகி


  கற்பிழந்தார் பெண்ணென்றால் அங்கேயொரு
  கருத்திழந்த ஆண்மகனால் என்று சொன்னார்
  சொற்பொலிவால் கவிதைகளால் நம்மை இன்றும்
  சூழ்ந்திருக்கும் அமர கவி பாரதியும்
  வெற்றுரைகள் பேசி நின்றார் வீணர்களும்
  விழியழகு மாதரினை இகழ்ந்து நின்றார்
  கற்றவரா இல்லை இவர் படித்தவர்கள்
  கல்வி நன்கு அறியாத ஈனர்கள் காண்-


  எப்போதும் பெண்களையே பற்றிப் பேச்சு
  எவ்விடத்தும் அவர் படமே வணிகமாச்சு
  தப்பாக வாழுகின்ற ஆண்கள் தம்மை
  தலைவர் என்று வணங்குகின்ற கீழாம் சூழ்ச்சி
  அப்பா இவர் தம்மின் அசிங்கமெல்லாம்
  அன்னை தமிழ் ஒரு நாளும் பொறுக்க மாட்டாள்
  எப்பாடு பட்டேனும் இந்த நிலை
  இல்லாமல் ஒழித்திடுவோம் தமிழர் நாட்டீர்

2 மறுமொழிகள்:

said...

நனறி நண்பரே

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்த்துக்கள்

said...

வணக்கங்கள் தமிழ்கடல் ஐயா அவர்களே! பெண்கள் தம்மை இழிவுபடுத்தும் பாங்கு குறித்து மிகச்சரியாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்க தமிழ்!