Friday, August 15, 2008

குறட் கருத்து

 அன்பு இன்றி வாழ்வதிலே வெட்கம் இன்றி
  அறம் தன்னைப் புறம் தள்ளி செல்வம் சேர்த்து
  தன் குலத்தை உறவையெல்லாம் ஒதுக்கி வைத்து
  தானும் எதும் அனுபவிக்க எண்ணம் இன்றி
  புன் செயலாய்ப் பொருள் தேடி வைக்கும் மாந்தர்
  புரியார் அச்செல்வமெல்லாம் வம்பர் கையில்
  தன் அருமை தெரியாமல் கேவலமாய்த்
  தடுமாறிச் சீரழியும் ஒழிந்தே போகும்

  குறள்

 அன்பு ஓரீஇத் தன்செற்று அறம் நோக்காது ஈட்டிய
 ஓண் பொருள் கொள்வார் பிறர்

0 மறுமொழிகள்: