Saturday, August 2, 2008

குற்ட் கருத்து்

உலகெங்கும் நோய்களுக்கு மருந்து கண்டார்
ஊர் போற்ற வாழுகின்றார் உண்மை உண்மை
பலமான அவர் அறிவு கண்டு போற்றி
பணிந்தவரைக் கேட்டு நின்றேன் எந்தன் நோய்க்கு
சரியான மருந்து எது என்று அவர்
சலிக்காமல் சிரிக்கின்றார் என்ன என்றேன்
விரிகின்ற விழியாளின் வழியாய் வந்த
வெம்மை நோய்க்கு அவள் தானேமருந்து என்றார்

குறள்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்கு தானேமருந்து

0 மறுமொழிகள்: