Thursday, August 14, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

எல்லோரும் உறங்குகின்றார் இவ்விரவால்
  யான்மட்டும் உறங்கவில்லை அவர் பிரிவால்
  பொல்லாத இரவு இது அன்பு கொண்டார்
  போய் விட்டார் என்பதனால் துணையேயின்றி
  நல்லாள் நான் தவிக்கின்றேன் எனக் கருதி
  நாடி எந்தன் துணை மட்டும் கொண்டு நன்கு
  உள்ளார்கள் அனைவரையுமுறங்கச் செய்து
  ஒரு துணையாய் உறக்கமின்றி வைத்ததென்னை

  குறள்

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை

0 மறுமொழிகள்: