Tuesday, August 12, 2008

உன் விளையாடல்

நெற்றியிலே திருநீறு பூசுகின்றார் நெஞ்சுக்குள் பல தீங்கு தேடுகின்றார்
  வெற்றுரைகள் அள்ளி அள்ளி வீசுகின்றார் வீதியெல்லாம் பொய் வேடம் போடுகின்றார்
கற்றவர்கள் இவர் கண்டு நொந்து நின்றார் கண்ணுதலான் தன்னிடத்தில் வேண்டி நின்றார்
  எத்தி பல தீங்குகளைச் செய்து பின்னும் எக்கவலையில்லாமல் வாழுகின்றார்
உற்றவரே எங்களது உடையவரே உலகனைத்தும் காத்து நிற்கும் உமை இணையே
  நற்றவமே உங்களையே வேண்டி நின்றோம் நலமருள்க நலமருள்க எம் சிவனே
பொற் பதமே பணிகின்றோம் உம்மையன்றி போக்குண்டோ எங்களுக்கு காத்தருள்க
  கொற்றவரே உணர்கின்றோம் இவை அனைத்தும் கூத்தன் உன் விளையாடல் என்று நன்றாய்
   

0 மறுமொழிகள்: