Friday, August 22, 2008

பழம்பாடல் அவ்வை

 பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்த தாயை
  பெருமை பெறும் கல்வி தந்த தந்தை தன்னை
  உற்றவளாய் உடல் சேர்த்து இன்பம் தந்து
  உயிர் காத்துச் சூலுற்று குழந்தை ஈன்ற
  நற்றவமாய் வந்திட்ட மனைவி தன்னை
  நலமாகப் பெற்றிட்ட பிள்ளைகளை
  உற்றவரை ஊராரை தன்னை நாடி
  ஒடி வந்து சரணமென நின்றார் தம்மை


  கற்றவரை நல்லவரை எவரெனினும்
  காப்பாற்றி உதவாமல் செல்வம் சேர்த்து
  பொற் பெட்டி தனில் பூட்டி வாழ்வார் தம்மை
  போட்டு நல்ல ரத்தம் வர தாக்குவார்க்கே
  அச் செல்வம் சொந்தம் எனப் போயே சேரும்
  அதுவேதான் அச் செல்வம் பெறும் பெருமை
  நிச்சயமாய் உணர்க இதை மானிடரே
  நிலையில்லாச் செல்வமதை கொடுத்து வாழ்வீர்

  செய்யுள்

  பெற்றார் பிறந்தார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
  உற்றார் உகந்தார் உகந்தார் என் வேண்டார் - மற்றோர் 
  இரணம் கொடுத்தால் இடுவர் : இடாரே
  சரணம் கொடுத்தாலும் தான்

0 மறுமொழிகள்: