Thursday, August 21, 2008

பழம்பாஅடல் அவ்வை புறநானூறு

  ஊர்ச் சிறு குளத்தில் யானை குளிக்கும்
  உள்ளூர்ச் சிறுவர் ஒடி வந்ததனின்
  பார்க்க அழகாம் தந்தம் தன்னை
  பள பளவென்றே கழுவித் துடைப்பர்
  ஆர்க்கும் யானை அமைதியாக
  அவர்கள் அன்பில் இன்பம்கொள்ளும்
  கேட்கும் எம்மை அது போல் தானே
  கேளிராக்கி இன்பம் கொள்வாய்


  புலவர் எமக்கு அன்பாய் இருப்பாய்
  பொங்கு போரில் உன்னைக் கண்டால்
  கலக்கி எதிரி உயிரை குடித்துக்
  காலனாகி அனைத்தும் முடிப்பாய்
  இலக்கு வைத்து களத்தில் அழிக்கும்
  எமனாய் யானை வருதல் போல
  உனக்கு நீதான் அதியமானே
  உவமையாவாய் வெல்க வெல்க

  புறநானூறு

  ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
  நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
  இனிமை பெரும எம்க்கே மற்றதன்
  துன்னரும் கடாஅம் போல
  இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே
   

0 மறுமொழிகள்: