Wednesday, August 20, 2008

பழம் பாடல் அவ்வை

 இழிதொழில்கள் எத்தனையோ செய்திட்டாலும்
  இன்னல்களைச் செய்வதிலே மகிழ்வுற்றாலும்
  பழி எதற்கும் அஞ்சாத துன்பங்களை
  பண்புடையோர் தனை நோக்கி அனுப்பிட்டாலும்
  வழிவழியாய் உதவுகின்ற பண்பதனை
  வதை செய்து நிற்பார்க்கும் செய்தருளல்
  பழிக்கஞ்சும் பண்பாளர் பெருமையாகும்
  பார் விட்டு மறையும் வரை உதவி நிற்பார்


  கனி தந்து நிழல்தந்து காலம் தோறும்
  காப்பாற்றி நிற்கின்ற மரம் அதுவும்
  பனியதுவோ மழையதுவோ வெயிலதுவோ
  பல காலம் அவையெல்லாம் தாங்கி நன்கு
  கனிவோடு உதவ அவை தன்னை வெட்டி
  கருணையின்றி நடந்தார்க்கும் நிழலே தரும்
  தனை முழுதும் வீழ்த்தும் வரை நிழலே தரும்
  தண்ணிழலின் மரம் போன்றோர் பெரியார் இங்கு

  செய்யுள்

  சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
  ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
  குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
  மறைக்குமாம் கண்டீர் மரம்

1 மறுமொழிகள்:

said...

அருமை அய்யா!


அவ்வையை அற்புதமாகப்புரிய வைத்திருக்கிறீர்கள்..!