Monday, August 18, 2008

பழம் பாடல் அவ்வை

  பூக்காது காய்த்துப் பழம் நல்கும் பலா மரம் போல்
  புகலாமல் தானாக உதவி நிற்பர் பெரியரவர்
  பூத்துப் பின் காய்த்துப் பழம் நல்கும் மாமரம் போல்
  புகன்றுதவி செய்வதனைச் சொல்லி நிற்பர் சிறியரவர்
  பூத்தும் காய்த்துக் கனி நல்கா பாதிரி போல்
  புல்லர்களாம் கயவர்களும் பூமியிலே வாழ்ந்திருப்பார்
  காத்து மக்களையே கனிவாகக் காப்பாற்றும்
  கண்வேலா இவ்வுண்மை கண்டு கொண்டு ஆண்டிடுக


  செய்யுள்
  சொல்லாமலே பெரியர் சொல்லிச் சிறியர் செய்வர்
  சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல
  குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
  பலா மாவைப் பாதிரியைப் பார்

0 மறுமொழிகள்: