Saturday, August 23, 2008

பழம்பாடல் அவ்வை

மானம் ஒழிந்து விடும் மா பெரிய குலம் ஒழியும்
  காணுகின்றார் வணங்கி நிற்கும் கல்வி அது ஒடி விடும்
  வான் போற்றும் வள்ளற் குணம் தானாய் மறைந்து விடும்
  வளர்ந்தெங்கும் வழி காட்டும் அறிவுடைமை வீழ்ந்து படும்
  தானம் கொடுக்கின்ற தன்மையது ஒழிந்து விடும்
  தவமாய்த் தவமிருப்பார் தவமதுவும் கலைந்து விடும்
  பேணும் முயற்சியதும் பின்னடையும் தாளாண்மைப்
  பெருமை அது ஒழியும் அங்கே பசியென்று வந்து விட்டால்


  தேனே மலரே என் தீஞ்சுவையே என்றெல்லாம்
  வானைத்தொடுகின்ற வகையினிலே கொஞ்சி நிற்கும்
  கானம் மறையும் விளை காமம் அது மறையும்
  கண்மணியார் எண்ணமெல்லாம் காணமல் போய் ஒழியும்
  வானமழையாலே வளருகின்ற பயிர்க் குலங்கள்
  வயிற்றுப் பசி தீர்க்க வரவில்லையென்று சொன்னால்
  நானில்லை நீரில்லை இப்பத்தும் பறந்து விடும்
  நானிலத்தீர் பசி நடத்தும் நாடகத்தில் நாம் இழிவோம்

  செய்யுள்

  மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
  தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
  கசிவு வந்த சொல்ல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
  பசி வந்திடப் பறந்து போம்

0 மறுமொழிகள்: