Thursday, June 19, 2008

பழம்பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

கண்களினால் வருகின்ற துன்பம் இது
கண்டதிது ஒரு நாள்தான் சோழனையே
பெண் எந்தன் பாடு பெரும் பாடாய்ப் போச்சு
பேச ஒன்றும் இல்லை எந்தன் வாழ்க்கையிலே
கண்ணிரண்டும் நன்றாக உறங்கி விட
கனவில்லை சோழனையே காண்பதற்கே
கண்ணான சோழன் அவன் எதிரில் வர
காண்பதில்லை நாணத்தால் கண்ணிரண்டும்

பெண்ணவளின் வருத்தமெல்லாம் கடலுக்குள்ளே
பெரும் அழகு மரக்கலங்கள் கொண்ட சோழன்
விண்ணுயரப் பெரும் புகழைக் கொண்டு ஓங்கும்
வீராதி வீரன் அவன் செங்கோலன்றோ
புண்பட்டுப் போகிறது பெண்ணின் உள்ளம்
புரியாத மன்னன் என்று பலரும் தூற்ற
கண் செய்த தவறுகளால் மன்னன் அன்றோ
கவலைகளுக் காளாவான்என்று நொந்தாள்



முத்தொள்ளாயிரம்

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன் விலக்கு நாணும் - இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப பெருமானார்
செங்கோல் வடுப்படுப்ப ச சென்று

0 மறுமொழிகள்: