Saturday, June 28, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

கண்கள் இது அவர் காணக் காதலித்தேன்
காதலரும் வந்து என்னை ஆதரித்தார்
பண்ணிசைத்தோம் பல விதமாய்ப் பாடி நின்றோம்
பாடலைப் போல் கூடலையும் தேர்ந்து வென்றோம்
மன்னவரும் எனைப் பிரிந்தார் அழகினோடு
மங்கை யெந்தன் நாணமதும் கொண்டு சென்றார்
தென்னவரோ கைம்மாறாய் நோய்கள் தந்தார்
தீராத காமமதும் பசலையதும்


குறள்
சாயலும் நாணும் அவர் கொண்டார், கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

0 மறுமொழிகள்: