Tuesday, June 17, 2008

உடல் நலம்

        தாய் தந்தை  வழியினிலே அன்பு வரும்

                தரமான  கல்வி வரும் நோயும் வரும்

      வாழ்வதற்குச் சொத்துக்கள் கூட வரும் அதன்

               வழியாகச் சொந்தங்கள் துன்பம் கூடும்

      ஆய்வதற்கு ஒன்று சொல்வேன்  உடல் நலமும்

                அவர் வழியாய்  வருவதுதான் உணர்ந்தே செல்லும்

      தாய் போன்றோ  தந்தை போன்றோ உடல் இருக்கும்

                தவறாக அதை  மாற்ற முயன்றிடாதீர்

2 மறுமொழிகள்:

said...

//தந்தை போன்றோ உடல் இருக்கும்

தவறாக அதை மாற்ற முயன்றிடாதீர்//


நெல்லை கண்ணன் அய்யா,

நீங்கள் எதை சாடுகிறீர்கள்?மஞ்ச துண்டு,பேராசிரியர்,மானமிகு அய்யா போன்றவர்கள் தந்தையைப் போல் தாடி வளர்த்துக்கொண்டு திரியாமல் ஷேவ் செய்து வாழ்வதையா?

பாலா

said...

அவரையெல்லாம் மறந்து நீண்ட
நாட்களாச்சு
அன்னை தமிழ் மட்டும் தான்
நெஞ்சில் உள்ளாள்

வாழ்க தமிழுடன்
அன்புடன்
நெல்லைக்கண்ணன்