Saturday, June 14, 2008

குறட் கருத்து

       பொய்  கூறி  வாழ்ந்திடலாம்  என்று  எண்ணும்

                பொறுப்பற்றோர் தனைப் பார்த்து  வள்ளுவரும்

       சொல்கின்றார்  ஒரு  செய்தி  ஆகா   ஆகா

                சோர  உணர்வுள்ளோர்கள்  உணர்வதற்காய்

       எல்லார்க்கும்  தெரியாதே  பொய்கள்  சொல்லி

                 ஏய்த்ததுவாய்  நினைக்கின்றீர் அய்யோ  பாவம்

       உள்ளம்  உம்  உள்ளம்  அப்பொய்யைக்  கொண்டு

                 உமைச் சுட்டு  உமைச்சுட்டுக்  கொன்றே  போடும்

                                      திருக்குறள்

          தன்நெஞ்சறிவது  பொய்யற்க  பொய்த்த பின்

          தன்நெஞ்சே  தன்னைச் சுடும்

0 மறுமொழிகள்: