Thursday, June 26, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

தூதென வந்தார்க்கெல்லாம் துய்ய நல் விருந்தளித்தல்
மாதென வந்தார்க்கெல்லாம் மாபெருங் கடமையன்றோ
சூதிலாப் பெண்ணாள் நல்ல சுந்தரத் தோற்றம் கொண்டாள்
ஏது நான் செய்வேன் எந்த விருந்தினை நான் அளிப்பேன்
சோதனைஅய்யோ என்றாள் சுகமான இரவில் வந்தான்
காதலன் அவனைத் தந்த கனவிற்கு மங்கை நானும்
யாது தான் விருந்தாய்ச் செய்வேன் எப்படிப் போற்றி நிற்பேன்
தூதாக வந்த கனவு தூற்றாதா என்னை என்றாள்

குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன் கொல் விருந்து

0 மறுமொழிகள்: