Friday, June 20, 2008

பழம்பாடல் புதுக்கவிதை கம்பன்

நீண்ட அப்பார்வை நஞ்சே நெருங்கிட முடியார்க்கெல்லாம்
நிலைத்திடும் அமுதம் அந்த நீள்விழிப் பெண்ணாள் சொல்லே
காண்தகு அழகுப் பெண்ணாள் கைகளில் மதுவை ஏந்திக்
களித்திட்டாள் கோப்பைக்குள்ளே தன்னையே கண்டாள் அங்கே
வாள் நுதல்ப் பெண்ணாள் அந்த வடிவத்தை வேறோர் பெண்ணாய்
வகை செய்து அவளையும் வா மது உண்போம் என்கின்றா ளாம்
ஆள் தூக்கும் மதுவால் வந்த அறியாமை இதனைப் போல அறியாமை வேறு இங்கு யாரிடம் உண்டு சொல்வீர்

கம்பன் பாடல்

விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ
வாள் நுதல் ஒருத்தி காணா
தடன் ஒக்கும் நிழலைப் பொன் செய்
தண் நறுந்தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே
உண்ணுதி தோழி என்றாள்

0 மறுமொழிகள்: