Saturday, June 21, 2008

வண்ணதாசன் என்ற கல்யாணிக்கு

பாடல்கள் அனைத்துமே ஒன்றென்   றுணர்ந்துளேன்
பக்குவத் தமிழினாலே
படர்ந்திடும் காற்றிலே மிதந்திடும் சுரங்களும்
பாடலின் இசையினாலே
மூச்சுக்கு இடையிலே முன்னேது பின்னேது
முடிவதன் கையில்தானே
முதியவர் கூட்டமும் கண்ணாடி முன் நிற்கும்
முன் நிலை எண்ணலாலே


ஆடிடும் கூட்டமும் இட வலம் காட்டினும்
அடி வயிறு நடுவில்தானே
அழ்கான கன்னிமார் கண்ணாடி முன் நிற்றல்
அனுபவம் உணரத்தானே
கூடிடும் கூட்டத்தில் தேர் வடம் பிடித்திட
கூட்டாளி நீயே என்றால்
கொடுப்பினை அம்மையும் அப்பனும் கொண்டனர்
கூடி நாம் தேரிழுக்க

0 மறுமொழிகள்: