Saturday, June 21, 2008

வாய்ப்பை நல்கும்

தேரோட்டம் நடந்ததெங்கள் ஊரில் நன்கு
தெருவடைக்க ஊரடைக்க மக்கள் கூட்டம்
காரோட்டம் தனையெல்லாம் நிறுத்தி விட்டு
கண்ணுதலான் தேரோட்டம் நடத்தி நின்றோம்
போராட்டம் பொச்சரிப்பு எதுவும் இன்றி
பொதுமக்கள் ஒன்றாக இணைந்து நின்றார்
சீராட்டி இறைவனையும் கொஞ்சுகின்ற
சிறப்பிந்த தமிழ்ரினச் சிறப்பு அன்றோ


ஆனி மாதம் தேரோட்டம் நடத்தி விட்டோம்
ஐப்பசியில் திருமணத்தை நடத்தி நிற்போம்
நானிலத்தில் அம்மையோடு அப்பனுக்கு
நல்ல விதம் பிள்ளைகளே நடத்தி வைக்கும்
காணுதற்கு அரிதான திருமணத்தைக்
காண்பதற்கு வருக என உமை அழைத்தோம்
பேதமின்றி அனைவருமே ஒன்றாய்க் கூட
பெருமானின் திருமணம்தான் வாய்ப்பை நல்கும்

0 மறுமொழிகள்: