Sunday, June 22, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

காதலன் தான் என்ன செய்ய பொருளை ஈட்டக்
கடல் கடந்து செல்லுதற்கு ஆசை கொண்டான்
பேதையிடம் சொல்லுதற்கு சென்று நின்றான்
பேச எங்கு விட்டாள் அந்தப் பெண்ணின் நல்லாள்
ஓசைக் கடல் தாண்டி நீயும் செல்லும் போதே
உயிர் இழந்து எந்தன் உடல் வீழ்ந்து போகும்
ஆசை அது அவ்வளவு நெஞ்சுக்குள்ளே
அறிந்தால் நீ பிரிவாயா அன்பு அத்தான்


நாசம் அற்று நீ வாழ வாழ்த்துகின்றேன்
நாள் தோறும் உன்னை நினைத்தே போற்றுகின்றேன்
வாச மலர் எனை விட்டுப் பிரிவதென்றால்
வாய் திறக்க வேண்டாம் நீ சென்று விடு
ஆசையுடன் உனை அனுப்பி செல்வம் சேர்த்து
அங்கிருந்து வரும் வரையில் காத்திருக்கும்
நேசமுள்ள கல் மனத்துப் பெண்ணிருந்தால்
நீங்குவதை அவரிடத்தில் சொல்லிச் செல்லு


குறள்


செல்லாமை உண்டேல் எனக்கு உரை ' மற்று நின்
வால் வரவு வாழ்வார்க்கு உரை

1 மறுமொழிகள்:

said...

இது போன்றதொரு வலைப்பூவிற்கு ஏன் மறுமொழிகளெ இல்லை??