Friday, June 20, 2008

நான் என்ன செய்வேன்

ஊரெல்லாம் கூடியே எனை வாழ்த்தி நிற்கையில்
உள்ளத்துள் அச்சம் வருதே
உயிரான தமிழ் அவள் உடன் என்றும் இருப்பதால்
உடன் அச்சம் விலகி விடுதே
தேரோடும் வீதிகொள் திரு நெல்லைப் பதியிலே
தீந்தமிழ் மாந்தி வாழ்ந்தேன்
தினம் அந்த மாத்தமிழ் என்னையே வாழ்த்திட
தீங்கின்றி வாழ்ந்து வென்றேன்

காத்திடக் கலந்திட உதவிட எனக்கென்று
கண்ணெனும் தமிழருண்டு
கவலைகள் பகிர்ந்திட தீர்த்திட எனக்கிங்கு
கல்யாணி நண்பருண்டு
பார்த்திட்ட அனைவரும் நண்பர்கள் என்றுதான்
பழகி நான் உவந்திருந்தேன்
பழகிய சிலரிங்கு உணர்ந்திடவில்லையே
பாவி நான் என்ன செய்வேன்

0 மறுமொழிகள்: