Sunday, June 22, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

ஆடைக்குள் அடங்காத அகன்ற அல்குல்
அய்யய்யோ மார்பகங்கள் ஐயோ ஐயோ
ஜாடைக்கு மலைகள் என்று சொன்னால் கூட
சரியாமோ தவறாமோ சொல்லி வைப்போம்
கூட நிற்கும் ஆடவரின் தோள் மலை போல்
கூடுதற்காய் நீர் நிலைக்குள் நெருங்குகின்றார்
பாடு படும் நீர் நிலையின் பாடதனைப்
பாடுகின்றான் கம்பனெனும் பாவி மகன்

எல்லாமே பெரிதாக இருப்பதெல்லாம்
இறங்கி அந்த நீர் நிலையை நெருக்கும் நேரம்
அல்லாடிப் போகிறதாம் நீர் நிலையும்
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அன்றே கம்பன்
வல்லானாய்ச் சொல்லுகின்றான் வியந்து நின்றேன்
வடிந்திடுமாம் அவர் எடையின் நீர் வெளியே
சொல்லுக்குச் சொல்லடுக்கித் தமிழாம் தாயைச்
சொக்க வைக்கும் கம்பனது பாட்டைப் பார்ப்போம்

கம்பன்

மலை கடந்த புயங்கள் . மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல் .கடம் படு
முலைகள் தம்தமின் முந்தி நெருங்க லால்
நிலை கடந்து பரந்தது நீத்தமே

0 மறுமொழிகள்: