Wednesday, June 18, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

            வெண் கொற்றக்  குடையின்  கீழ் விண்ணவரும் வாழ்ந்திருக்க

                  வெற்றி கொண்ட   பாண்டியனும்  ஆண்டிருக்க

             தண் மாலை பாண்டியனைத் தழுவி   அங்கே மகிழ்ந்திருக்க

                   தனியாக நான்  மட்டும் ஏங்கி நிற்க

            கண் கொண்ட  காரணத்தால் கண்டதனால் காத்திருக்க

                   கவலை  மட்டும் என் மனதை ஆட்டி நிற்க

            பெண் பாட்டைச் சொல்லுதற்கு  யாருமில்லை அவன் ஆட்சி

                    பெருமை   நீதி கொண்ட ஆட்சி என்பதனால்

                                     முத்தொள்ளாயிரம்

                    தானேல் தனிக்குடைக் காவலனால்  காப்பதுவும்

                    வானேற்ற வையகம் எல்லாமால் -  யானோ

                    எளியேன் ஒர் பெண் பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்

                    அளியானேல் அன்றென்பார்  ஆர்

            

0 மறுமொழிகள்: