Monday, June 9, 2008

நான் வாழ்வேன்

           எழுத்ததனைத்  தவமாகக் கொண்டு  வாழ  
                     இறையவரும்  நல்லருளைத் தந்திருந்தார்
           பொருத்தமில்லார்  மத்தியிலே  அசிங்கம்  கொண்ட
                     பொச்சரிப்புக்கு  இடையே  போய்ச் சீரழிந்தேன்
           வருத்தமதும்  கொண்டழுதேன் இறைவன் தந்த
                      வ்ண்டமிழை  மறந்திருந்தேன் அலைந்து நொந்தேன்
           பொறுத்தென்னை  காத்து  நின்ற  இறையே இன்று
                       போற்றி யென்னை  ஆதரித்து  எழுதச் சொன்னார்


           கணிப் பொறியில்  வந்தமர்ந்து  இறைவன்  தந்த
                        கைகளையே  தட்டச்சில்  வைக்கும் நேரம்
           அணி அணியாய்க்  கவிதைகளை  அவரே  தந்து
                        ஆதரித்து  அருள்கின்றார்  தினம்  தினமும்
           பணி யிதனை நான்   இங்கே  தொடர்ந்து  செய்யப்
                         பார்  நிறைந்த  தமிழினத்தார் உதவி செய்தால்
           பிணியின்றி  நான்  வாழ்வேன்  இறைவன்  அவன்
                         பெருங்  கருணைத் தமிழாகி  வாழ  வைக்கும்

0 மறுமொழிகள்: