Thursday, June 26, 2008

தமிழாய் வாழ

தினந்தோறும் படிக்கின்றேன் அன்னை தமிழ்
தேக்கி வைத்துக் காத்துள்ள செல்வமெல்லாம்
மனம் கொண்டு படிக்கின்றேன் தீந்தமிழாள்
மயக்குகின்ற விதம் சொல்லும் கவிதையெல்லாம்
இனம் கண்டார் எல்லோரும் வாழ்த்துகின்றார்
இதயத்துள் வைத்தென்னைப் போற்றுகின்றார்
குணம் கொண்ட நல்லார்கள் அனைவரையும்
கும்பிட்டு வாழ்த்துகின்றேன் தமிழாய் வாழ

0 மறுமொழிகள்: