Monday, June 23, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

நீர் நிறைந்த ஏரியிலே பெண்களெல்லாம்
நீண்ட நேரம் ஆடி நின்ற ஆட்டமதில்
சீர் நிறைந்த கண்களெல்லாம் சிவப்புறவே
சிவந்தவாய் நிறம் மறைந்து வெளுப்புறவே
வார் கொண்ட மார்பு கொண்ட சந்தனத்தை
வளர் அழகு மார்பிலகொணட குங்குமத்தை
நீர் கலைத்து நின்றதவர் காதலர் போல்
நிலை குலைய வைத்ததவர் சீலையினை



காதலர்கள் சேரும் நல்ல கலவியிலே
கலைவதெல்லாம் கலைந்ததந்த நீர் நிலையில்
போதமதை இழந்து அங்கே மங்கை நல்லார்
புகுந்து புகுந்து ஆடியதை கம்பன் இங்கு
ஆர்வமுடன் சொல்லுகின்றான் நீர் நிலையும்
ஆடவர் தம் தொழிலையெல்லாம் செய்ததாக
பாடலிதைத் தருகின்றேன் படித்துப் பாரும்
பாவி மகன் கம்பனையே புரிந்து கொள்ளும்



கம்பன்
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்புற
மெய் அராகம் அழிய , துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே

0 மறுமொழிகள்: