Friday, June 20, 2008

குறட் கருத்து

அற வாழ்க்கை தன்னையே அகமகிழ்ந்து ஆளுவார்
அன்பிலே வாழ்ந்து நிற்பார்
புற வாழ்க்கை அவலங்கள் தன்னையே கண்டவர்
பொறுக்காது நாணி நிற்பார்
ஒரு வேளை வாழ்க்கையில் துன்பமே சூழினும்
உயிரையே விட்டு வாழ்வார்
திருவான நாணத்தை ஒரு போதும் விட்டிடார்
தெய்வமே போற்ற வாழ்வார்


திருக்குறள்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
நாண்துறவார் நாண ஆள்பவர்

0 மறுமொழிகள்: