Tuesday, June 24, 2008

வாழ்ந்து பாரும்

கற்றவர் தங்களைப் பெற்றவர் போல் கொண்டு
காப்பாற்ற எவருமில்லை
கனிவான மொழி கொண்ட தெளிவான கவிஞரைக்
காண்பதற் காருமில்லை
பெற்றவர் காட்டிய பெரு வழி என்பது
பிரிவன்றி ஏதுமில்லை
பிரிந்திட்ட பிள்ளைகள் உணர்ந்திடும் பொழுதிலோ
பெற்றவர் உயிர்களில்லை
சட்டென உணர்ந்திங்கு வாழ்வதைத் தொடங்குவீர்
சத்தியம் கொண்டு வாழ்வீர்
சரித்திரமாகி உம் வாழ்வது பொலியுமே
சாதித்து வெல்க நீரே



விட்டிடும் பொருளல்ல பாசமும் அன்புமே
விலகிப் பின் அழுது நிற்பீர்
விலகாத நட்பையும் அன்பையும் கூட நீர்
விளங்காமல் விலகிச் செல்வீர்
சட்டென எதையுமே உணராமல் உணராமல்
சரிகின்றீர் நொந்து நொந்து
சரியான அறிவென்றால் அன்பென உரக்கவே
சாற்றுது குறளும் இங்கே
அறியாமல் இல்லை நீர் அறிகின்றேன் நன்கு நான்
அறிந்ததைவாழ்வில் கொள்ளும்
அதன் பின்னர் உம்மையே ஆண்டவன் தம்முடை
அன்பனாய்க் கொண்டு வாழ்வான்

0 மறுமொழிகள்: