Saturday, June 28, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

காதலித்து விட்டேனாம் ஊரார் அதைக்
காண்பது போல் செய்தேனாம் என்றும் எங்கும்
கூடி அவர் கொண்டேனாம் ஊரைப் பற்றிக்
கொஞ்சம் கூட நினைப்பின்றி நடந்தேனாம் நான்
தேடி இதை ஊரெங்கும் சொல்வதனால் நான்
திருந்திடவா வாய்ப்புண்டு காமத்தீயைப்
பேசி இவர் அணைத்திடவே நினைத்தல் நெய்யால்
பெருந்தீயை அணைத்திடவே முயல்தல் ஆகும்

குறள்

'நெய்யால் எரி நுதுப்பேம்'என்று அற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

0 மறுமொழிகள்: