Saturday, June 21, 2008

எளிமையும் நட்பும்

அன்புடையீர் .
வணக்கம்.நேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திருப்பூர் சுப்பராயன்
அவர்கள் என்னைத் தேடி எனது இல்லம் வந்தார் . தேடி என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எனது நாற்பது ஆண்டு கால அரசியல் அனுபவம்.
மக்கள் பிரதிநிதிகளான அவர்கள் மன்னர்களாகி விடுவர்.ஆனால் தோழர்
சுப்பராயன் அநியாயத்திற்கு மக்கள் தொண்டராகவே இருந்து தீர்க்கிறார் .
முப்பத்தைந்து ஆண்டு நட்பு .அன்று தவத்திரு தமிழ்த்தந்தை குன்றக்குடி அடிகளார்
தலைமையில் மதுரையில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயிலில் பட்டிமன்றம்
இன்றைய மனித குல மேம்பாட்டிற்கு வழி காட்டச் சிறந்தது காந்தீயமா
குறளீயமா மார்க்சீயமா காந்தீய அணிக்கு நான் தலைமை முதுபெரும் காந்தீய
வாதியான இன்றைய தீக்கதிர் ஆசிரியர் அண்ணன் மாயாண்டி பாரதி அவர்கள்
என் அணியில் குறளீய அணிக்கு தலைவர் அண்ணன் விடுதலை விரும்பி
அவர் அணியில் இனிய சகோதரர் பழகருப்பய்யா மார்க்சீய அணிக்கு அண்ணன்
தா.பாண்டியன் தலைவர் அவருக்கு அடுத்து நண்பர் சுப்பராயன் . அன்று கொண்ட
அன்பை இன்றும் தொடரும் அவர் அன்பினைஎன் சொல்வேன் . மக்கள் பிரதிநிதிகளான இவர்களை மக்கள் தான் சென்று சந்திக்க வேண்டும் .ஆனால்
சுப்பராயன் அவர்கள் அதே எளிமை அன்பு பண்புகளோடு இருக்கின்றார் என்பது
போற்றுதலுக்குரியது அந்தப் பட்டிமன்றத்தில் ஒரு சிறப்பு .அது வரை எல்லா
இடங்களிலும் மார்க்சீயத்திற்கே தீர்ப்பளித்த அடிகளார் அன்று காந்தீயத்திற்கு
தீர்ப்பளித்தார் .சுப்பராயன் அவர்களோடு நண்பர் முத்துராமலிங்கம் மாவட்டக்
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகவேல் காசி அவர்களும் வந்திருந்தனர் .நேற்று மன நிறைவாய் இருந்தேன்.சுப்பராயன் அவர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி சொல்வது எனது பெருங்கடமை என்று உணர்கின்றேன்.

0 மறுமொழிகள்: