Thursday, June 19, 2008

குறட் கருத்து

ஏய்ப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து
எத்தனையோ கோடிகளைச சேர்த்து வைப்பார்
வாய்ப்பதெல்லாம் தமக்கென்று வளைத்திடுவார்
வகை வகையாய்ச சேர்த்திடுவார் உணர மாட்டார்
போய் அதனை மறைத்து வைத்தல் பச்சை மண்ணில்
பொதிந்து வைத்த பாத்திரத்தில் தண்ணீர் தன்னை
ஊற்றி வைத்தல் போலாகும் ஒழுகிப் போகும்
உதவாது உதவாது உணர்வீர் நீரே


திருக்குறள்

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீ இ யற்று

0 மறுமொழிகள்: