Saturday, June 14, 2008

கொன்றார்

 

               புலிகளையே  கொல்லுகின்றார் தாவி  ஒடும்

                      புள்ளி  மான் கூட்டத்தைக் கொல்லுகின்றார்

              வலியின்றித் தோலுரித்து   உலகம்  எங்கும்

                      வணிகங்கள்  செய்தவரும்  வாழுகின்றார்

               எலிகளையும் கொல்லுகின்றார்  பறந்து  செல்லும்

                      இனிய நல்ல  பறவைகளைக்  கொல்லுகின்றார்

              வலிய  பெரும்  யானையினைக் கொன்று  அதன்

                      வாய்த் தந்தம்  விற்பனைக்காய்  ஆக்குகின்றார்

             2  சிட்டுக குருவிகளைக் கொல்லுகின்றார்

                      சிறுத்தைப் புலிகளையும்  கொல்லுகின்றார்

               எட்டுகின்ற  வரை அங்கு  வனத்தில்  வாழும்

                      எல்லா  உயிர்களையும்  கொல்லுகின்றார்

               கட்டுக்  கட்டாய்ப்  பணத்தை  ஈட்டுதற்கே

                       கனிவின்றி  உயிர்களையே கொல்லுகின்றார்

               தட்டுக் கெட்டே  அலையும்  மனிதர்  இவர்

                       தான்  சாவோம்  என்பதனையே  மறந்து கொன்றார்

0 மறுமொழிகள்: