Tuesday, June 10, 2008

பழம் பாடல் புதுக் கவிதை

               வடக்கிருந்து  வருகின்ற  வாடைக்  காற்று
                            வாயாரப் புகழுதிங்கே  பாண்டியனை
                மடக்கி  அவன்  வடக்கையையும்  தன்னுடைய
                            மாநிலத்தில்  சேர்த்தனால்  விளைந்த நன்மை
                தொடக்க  முதல்  புகழுதது  பாண்டியனை
                            தூய  அவன்  செங்கோலை  ஆட்சியினை
                 அடக்கமுள்ள  பெண்ணாளும்  அரற்றுகின்றாள்
                             ஆம்  அங்கு பாண்டியனால்  அவதி  யுற்றாள்


                 வடக்கிருந்து வருவதனால்  புகழ்ந்து  நின்றாய்  என்
                              வளையல்களை   நான்   இழந்த  தவனால்தானே
                 உனக்கென்ன  தெரியும்  தெற்கே  பொதிகை  மலை
                              உள்ளோர்கள்  சமையலுக்கே   ச்ந்தனமாம்
                 மணக்கின்ற  மரம்  கொண்டே  சமைத்திடுவார்
                               மாற்ன் அவன்  பெருமை  இது சரிதான்  ஆனால்
                 எனக்கிங்கு  விளைந்தற்கு  என்ன  நீதி
                               என்ன  செய்வாய்  தென்றலுக்கே  தெரியும் அது




                                                  முத்தொள்ளாயிரம்



                        மாறடு போர்  மன்னர்  மதிக்குடையும்  செங்கோலும்
                        கூறிடுவாய்  நீயோ  குளிர்  வாடாய்  -   சோறடுவார்
                        ஆரத்தால் தீ மூட்டும்  அம்பொதியில் கோமாற்கு  என்
                        வாரத்தால்  தோற்றேன்  வளை

0 மறுமொழிகள்: