Monday, June 9, 2008

தென்னாட்டுச் சிவனே

             யானை அதன்  கால்களிலே  என்னைப்  போட்டு
                     அப்படியே  கொன்று விடும்  ஆண்டவரே
             ஊனமுள்ள  இவ்வுடலை  சிங்கத்திற்கு
                      உண்வாகக் கொடுத்து  விடும்  என் இறையே
             வானுலகில்  நரகத்தில்  என்னைப் போட்டு
                      வதைப்பதற்கும்  வழி செய்யும்  பொறுத்துக்  கொள்வேன்
              தேனான  தமிழறியார்  முன்னே  மட்டும்
                       தென்னாட்டுச்  சிவனே  எனை   அனுப்பிடாதீர்

                                                  செய்யள்


        கங்குல்  யானைக் காலில்  படுத்தினும்  படுக்கலாம
                                   சுடர்  விழிப் ப்குவாய
        சிங்க  வாயிடைச்  செலுத்தினும்  செலுத்தலாம்
                                   தென் புலத்தவர்  கோமான்
        வெங்கண்  நரகிடை  வீழ்த்தினும்  வீழ்த்தலாம்
                                   விடையேறும்  
        எங்கள்  நாயக  தமிழறியார்கள்  முன்
                                   இயம்புதல்  தவிர்ப்பாயே

0 மறுமொழிகள்: