Wednesday, June 25, 2008

படி எல்லாம்

ஆங்கிலத்தைப் படியுங்கள் இந்தியெனும்
அம்மொழியும் படியுங்கள்
மேலும் மேலும் வேண்டும் மொழி
எல்லாமும் கற்றிடுங்கள்
வேண்டாமென்றே யாரும்
சொல்ல வில்லை
ஒங்கு புகழ்த் தாய் மொழியை
விட்டு விட்டு
உலகத்து மொழிகளையே
மதித்தீர் என்றால்
தீங்கு வரும் தாய் மொழிக்கு
என்ற எண்ணம்
தேராமல் இருப்பதுவும்
நியாயம் தானோ

2 மறுமொழிகள்:

said...

நல்ல கருத்து. உங்களின் தமிழ் பற்றை நான் மிகவும் நேசிக்கிறேன். இதைப் பற்றி என்னுடைய ப்ளாக்கில் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும். நன்றி.

http://svaidhyapages.rediffiland.com/blogs/2007/05/31/For-our-Country.html

said...

நலமான பிறமொழிகள் கற்பதனால் துயரில்லை..!! என்றும்
வளமான தாய்மொழியில் செப்பார்க்கு உயர்வில்லை..!!

அருமையான கவியதனில் உணர்த்துகின்றீர்..!! வாழ்க ..!! வாழ்க..!!