Saturday, June 21, 2008

குறட் கருத்து

அறிவார்ந்த அறிவுடையார் தமக்கு எல்லாம்
அறிவு வழி தருகின்றார் வள்ளுவனார்
செறிவான அறிவுடையார் முன்னர் சென்றால்
சிறப்பான உம் அறிவைக் காட்டி நில்லும்
அறிவற்றார் மத்தியிலே சென்று விட்டால்
அறிவற்றுச் சுண்ணாம்பாய் ஆகி நில்லும்
தெளிவான வழி சொன்னார் வள்ளுவரும்
திரு நாட்டில் நிம்மதியாய் அறிஞர் வாழ

குறள்

ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல்

0 மறுமொழிகள்: