Thursday, June 19, 2008

வறுமை துணை

தமிழுக்காய் வாழுகின்றார் தமிழர் நாட்டில்
தமிழாய்ந்து வாழ்கின்ற தமிழர் பல்லோர்
அவருக்கோ உதவுவதற்கு யாருமின்றி
அவதிகளே படுகின்றார் என்ற போதும்
தமிழுக்காய் வாழுகின்ற பெருமை கொண்டே
தன் நலமே இல்லாமல் வாழுகின்றார்
எவர் உதவப் போகின்றார் இவருக்கிங்கே
இனிய தமிழ் அன்னை துணை வறுமை துணை

0 மறுமொழிகள்: